கோல லங்காட் கடற்கரையில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்

சிலாங்கூர், தஞ்சோங் செபாட்டில் உள்ள கம்போங் தும்புக் கடற்கரையில் கடந்த சனிக்கிழமை, வெளிநாட்டுப் பிரஜை என்று நம்பப்படும் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மதியம் 12.45 மணியளவில் போலீசாருக்கு இந்த சடலம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக கோல லங்காட் காவல்துறைத் தலைவர் அக்மல்ரிசல் ரட்ஸி தெரிவித்தார்.

கடற்கரையில் சடலம் கிடந்ததாகக் கண்டெடுக்கப்பட்டதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். குற்றச் செயல் தொடர்பான  எந்த அறிகுறியும் இல்லை. மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் அல்லது அறிமுகமானவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் உடலை அடையாளம் காணவோ அல்லது உரிமை கோரவோ யாரும் முன்வரவில்லை என்றும் அக்மல்ரிசல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here