குவாந்தான்: பகாங்கில் உள்ள மாநகர மன்ற் அதிகாரிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மின்னணு சிகரெட்டுகள் அல்லது வேப்ஸ் விற்பனை நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாநில இஸ்லாமிய மத விவகாரங்கள், கிராமப்புற மேம்பாடு, ஒராங் அஸ்லி விவகாரக் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ சையத் இப்ராஹிம் சையத் அகமது, மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதை ஹராம் (தடைசெய்யப்பட்டது) என்று அறிவிக்க மாநில அரசு எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பகாங் மாநில முஃப்தி பிறப்பித்த ஃபத்வாவை, மாநில நிர்வாகக் குழு, மே 14 அன்று அங்கீகரித்தது. இது முன்னதாக மார்ச் 19 அன்று மாநில சட்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. மாநில அரசும் உடனடியாக ஃபத்வாவை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது என்று அவர் புதன்கிழமை (ஜூன் 11) பேஸ்புக்கில் ஒரு பதிவில் தெரிவித்தார்.
மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது சுகாதார அபாயங்களை ஏற்படுத்துவதாகவும் வீணாவதற்கு வழிவகுக்கும் என்பதால், அதைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று பகாங் ஷரியா சட்ட ஆலோசனைக் குழு தீர்ப்பளித்தது. பகாங் ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று முன்பு அழைப்பு விடுத்திருந்தார்.








