ஜார்ஜ் டவுன்: விற்கப்படாத சுமார் 3,000 வீடுகள், கட்டடங்கள் ஆகியவற்றிக்கு 5% தள்ளுபடியை அனைவருக்கும் விரிவுபடுத்த பினாங்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமே என்று முன்னர் இருந்த பிரச்சாரத்தை மாற்றியமைத்தது. மடானி உரிமை பிரச்சாரத்தின் கீழ் இந்த சலுகை இன்று முதல் ஒரு வருடம் நீடிக்கும் என்று முதலமைச்சர் சௌ கோன் இயோவ் கூறினார். கடந்த ஆண்டு நிலவரப்படி, இதுபோன்ற 2,796 வீடுகள் இருந்தன.
பினாங்கு வீட்டுவசதி வாரியத்தில் பதிவுசெய்து, தேசிய சொத்து தகவல் மையத்தின் கீழ் விற்கப்படாத வீடுகளாக சொத்துக்களை பட்டியலிட்ட மேம்பாட்டாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று அவர் கோம்தாரில் செய்தியாளர்களிடம் கூறினார். 5% தள்ளுபடிக்கான ஆரம்ப சலுகை சர்ச்சையைத் தூண்டியது. ஏனெனில் இது இந்திய முஸ்லிம் வீடு வாங்குபவர்களை மட்டுமே குறிவைத்தது.









