நான்கு மாநில காவல்துறைத் தலைவர்கள் உட்பட பல மூத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

ஜூலை 21 முதல் அமலுக்கு வரும் வகையில், நான்கு மாநில காவல்துறைத் தலைவர்கள் உட்பட பல மூத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான், மத்திய போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெறுவார் என்று புக்கிட் அமான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி இஸா இதற்கிடையில் புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநராகப் பொறுப்பேற்பார். மார்ச் மாதம் ஓய்வு பெற்ற ரம்லி யூசோப்பின் பதவியை இவர் ஏற்கிறார். கடந்த ஆண்டு மார்ச் முதல் நகர காவல்துறைத் தலைவராக ருஸ்டி பதவி வகித்து வருகிறார்.

பினாங்கு காவல்துறைத் தலைவர் ஹம்சா அகமது, புக்கிட் அமானின் நேர்மை தரநிலை இணக்கத் துறையின் புதிய இயக்குநராக பதவியேற்கிறார். அதே நேரத்தில் கெடா காவல்துறைத் தலைவர் ஃபிசோல் சாலே, மத்திய உள் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறையின் (செயல்பாடுகள்) துணை இயக்குநராக  நியமனம் பெற்றுள்ளார்.

மே 2024 இல் பினாங்கு காவல்துறைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ஹம்சா, மத்திய உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறையின் (செயல்பாடுகள்) துணை இயக்குநராகப் பணியாற்றினார். ஜூன் 25 அன்று ஓய்வு பெறவிருக்கும் அஸ்ரி அகமதுவுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்படுகிறார் இதற்கிடையில், ஃபிசோல் ஜூன் 2023 முதல் கெடா காவல்துறையின் தலைவராக இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here