MRSM மாணவர் பகடிவதை; மேலும் இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு மூன்று நாட்கள் தடுப்புக்காவல்

கோல திரெங்கானு:

மாரா அறிவியல் கல்லூரியில் பகடிவதைக்குள்ளான இரண்டாம் படிவ மாணவரின் வழக்குடன் தொடர்புடைய மேலும் இருவரை நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 27) மதியம் போலீசார் கைது செய்யப்பட்டதாகவும், பெசூட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 147 இன் கீழ் விசாரிக்க 15 வயதுடைய இரண்டு பேரையும் தடுப்புக்காவலில் வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூத்த உதவி பதிவாளர் யுஹானிஸ் முகமட் பிறப்பித்தார்.

முன்னதாக, 15 முதல் 17 வயதுடைய ஐந்து மாணவர்கள் விசாரணைக்கு உதவ ஞாயிற்றுக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை இரவு விடுதியில் மூத்த மாணவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாக MRSM பெசூட்டில் உள்ள படிவம் இரண்டு மாணவர்கள் இருவர் புகாரளித்தாகக் பெசூட் காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் அசாமுதீன் அகமது @ அபு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here