அமெரிக்காவில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.. நியூ ஜெர்சிக்கு சென்றிறங்கிய இந்திய பெண் மாயம்

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்காக ஜூன் 20 அன்று இந்தியாவிலிருந்து சென்ற சிம்ரன் (24) என்ற இந்தியப் பெண் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.

புதன்கிழமை கண்காணிப்பு கேமராவில் கடைசியாகக் காணப்பட்ட சிம்ரன், அப்போது எந்த விதமான மன உளைச்சலிலும் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், அவர் உண்மையிலேயே திருமணத்திற்காக வந்தாரா அல்லது இலவசப் பயணத்திற்காக இந்த அவ்வாறு பொய் சொன்னாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆங்கிலம் பேசத் தெரியாத சிம்ரனுக்கு அமெரிக்காவில் உறவினர்கள் யாரும் இல்லை. வைஃபை மூலம் மட்டுமே இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தும் சிம்ரனின் குடும்பத்தினரை இந்தியாவில் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

இந்த சம்பவம் முன்னதாக டொமினிகன் குடியரசில் காணாமல் போன இந்திய மாணவி சுதீக்ஷா கொனாங்கியின் சம்பவத்தை ஒத்ததாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here