நமசிவாய மந்திரத்தை உச்சரித்தால்

சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக வழிபடப்படுபவர் சிவ பெருமான். இவரே உலக உயிர்கள் அனைத்தும் படைத்தும், காத்தும், அழித்தும் வருவதாகவும், 14 உலங்களும் அண்ட சராசரங்களும் சிவனுக்குள் அடக்கம் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. வேத மந்திரங்கள் அனைத்துமாகவும், அவற்றின் உட்பொருளாகவும் நிறைந்திருப்பவர் ஈசனே என சிவனடியார்கள் போற்றுகிறார்கள். சிவனை போற்றி புகழ எத்தனையே மந்திரங்கள், பாடல்கள், பதிகங்கள் இருந்தாலும், பக்தர்கள் அனைவருக்கும் மிக எளிதாக மனதில் பதிந்துள்ளது “நமசிவாய” என்னும் ஐந்தெழுந்து மந்திரம் தான்.

சைவத்தின் மாமந்திரம் நமசிவாய எனும் ஐந்தெழுக்கள் மட்டுமே. சிவ வழிபாட்டில் திருநீறும் ருத்ராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்து இதில்  அகச்சாதனமாக விளங்குகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில் ‘ம’ என்பது ஆணவமலத்தையும், ‘சி’ என்பது சிவத்தையும், ‘வா’ என்பது திருவருள் சக்தியையும், ‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரம் நமசிவாய.

  • ‘நமசிவாய’ என்ற நாமம் உச்சரிக்க அமிர்த வச்சிரம் ஏற்படும். அமிர்த வச்சிரம் என்பது தெய்வீக ஆற்றல்களை வெளிப்படும் மந்திர சொல் ஆகும்.
  • ‘நமசிவாய ஓம் நமசிவாய’ என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும்.
  • ‘நமசிவயங் செலகை நமசிவாய’ என மந்திரம் உச்சரித்தால் அறுபத்து நான்கு பாஷாணங்களினால் ஏற்படும் விஷங்களும் தீரும்.
  • ‘நமசிவாயம் லங்க நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும்.
  • ‘சவ்வும் நமசிவாய நமா’ என்று உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.
  • ‘ஶ்ரீயும் நமசிவாய நமா’ என்ற மந்திரத்தை ஓதினால் கள்ளர்கள் வரமாட்டார்கள்.
  • ‘ஊங்கிறியும் நமசிவாய நமா’ என்ற மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிடைக்கும்.
  • ‘அலங்கே நமசிவாய நமோ’ என்ற மந்திரத்தைச் சொன்னால் புகழ் மற்றும் பெருமை உண்டாகும்.
  • ‘வநம சிவாய’ என்று செபித்தால் தேக சித்தி உண்டாகும்.
  • ‘ஓம் நமசிவாய’ என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
  • ‘லங்கிரியும் நமசிவாய’ என்று உச்சரித்தால் தானியங்கள் பெருகி வளரும்.
  • ‘ஓங்கிறியும் ஓம் நமசிவாய’ என்று சொல்லி வந்தால் தொழில் நன்றாய் நடக்கும்.
  • ‘ஓங் ஊங் சிவாய நம உங்நமா’ என்ற மந்திரத்தை உச்சரித்தால் பதினெட்டு வகையான குட்டமும் தீரும்.
  • ‘லீங் க்ஷும் சிவாயநம’ என்ற மந்திரத்தை உச்சரித்தால் பெண்கள் வசியம் ஏற்படும்.
  • ‘லூங் ஓங் நமசிவாய’ என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.
  • ‘ஓங் அங்கிஷ சிவாய நம’ என்று ஓதினால் பூமியெங்கும் சஞ்சாரம் செய்யலாம்.
  • ‘அங் உங் வங் சிவாய நம’ என மந்திரம் உச்சரிக்க உடலில் உண்டான நோய்கள் தீரும்.
  • ‘ஹம் ஹம் சிவாய நம’ என்று உச்சரித்தால் யோக சித்தி உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here