கோத்தா பாரு: கிளந்தான் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) பஞ்சியில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் பொது ஏலம் தொடர் 1/2025 மூலம் 205,290 ரிங்கிட்டை வசூலித்துள்ளது.
கிளந்தான் JPJ இயக்குனர் முகமட் மிசுவாரி அப்துல்லா கூறுகையில், 102 வாகனங்களை வெற்றிகரமாக ஏலம் எடுத்ததன் மூலம் இந்த வருமானம் கிடைத்ததாகவும், அவை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பறிமுதல் உத்தரவுகளைப் பின்பற்றி வெளிப்படையாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
ஒரு லோரி அதிகபட்ச ஏலமாக 51,000 ரிங்கிட்டாகவும், அதைத் தொடர்ந்து மற்றொரு லோரி 30,000 ரிங்கிட்டாகவும் அதே வேளை மிகக் குறைந்த ஏலம் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 250 ரிங்கிட்டாகவும் இருந்தது என்று ஏலத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, ஏலத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), தேசிய தணிக்கைத் துறை மற்றும் JPJ தலைமையகத்தின் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.









