வெளிநாட்டினரை சட்டவிரோதமாக நாட்டிற்குள் அனுமதித்தன் தொடர்பில் இரு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கைது

பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் வெளிநாட்டினரை சட்டவிரோதமாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகம், ஊழல் குறித்து விசாரிக்கும் சிறப்பு நடவடிக்கையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

விசாரணைகளுக்கு உதவுவதற்காக இரண்டு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். (குற்றவாளிகளின்) வலையமைப்பு உள்ளிட்ட செயல்பாட்டு முறையைத் தீர்மானிக்க மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று MACC இன் பினாங்கு வட்டாரம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முகப்பிட ஏற்பாடு என்பது பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை முறையான நடைமுறைகளுக்கு உட்படாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதை உள்ளடக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here