சாலையில் இருந்து விலகி சென்ற வாகனம்: மூவர் பலி- இருவர் காயம்

குவாந்தான்: வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை (LPT) 1 இன் KM200.8 இல், பல்நோக்கு வாகனம் (MPV) சாலையில் இருந்து விலகிச் சென்றதில் மூன்று வங்கதேச ஆண்கள் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் காயமடைந்தனர்.

இரவு 7:30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், ஓட்டுநர், Md Sabber Hasan30,  பயணிகள் Md Jahid Hasan 21, Abdullah 24, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக குவாந்தான் OCPD துணைத் தலைவர் முகமட் அட்லி மாட் தாவூட் தெரிவித்தார்.

குவாந்தானிலிருந்து கோலாலம்பூர் நோக்கி டொயோட்டா அவன்ஸாவில் அவர்கள் பயணித்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும், ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது பக்கமாக சறுக்கியதாக நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த விபத்தில், 45 வயதான எம்.டி. ஹபீப் பிஸ்ஸாஸ், 40 வயதான மணிராம் சந்திர போஸ் ஆகிய இரு பயணிகளும் காயமடைந்தனர். அவர்கள் தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு (HTAA) சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

MPVயின் ஓட்டுநரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாலை வரி மே 2025 முதல் காலாவதியாகிவிட்டது என்றும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக முகமது அட்லி கூறினார். இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here