போலி போலீசாரிடம் நம்பிக்கை வைத்த பொறியாளர் RM114,000 இழப்பு – கெமாமனில் இணைய மோசடி

சுக்காய், 

புக்கிட் அமானைச் சேர்ந்த 31 வயது பொறியாளர் ஒருவர், காவல்துறை அதிகாரி போல் நடித்து செய்த இணையவழி மோசடியில் சிக்கி, இரண்டு நாட்களில் RM114,000 இழந்தார்.

கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது ராசி ரோஸ்லியின் விளக்கத்தில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி பாதிக்கப்பட்டவருக்கு ஒரு சந்தேக நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வங்கி கணக்கு மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார் என கூறி, கைது செய்யப்படுவதைத் தவிர்க்க பணம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

பீதியடைந்த நிலையில், பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரின் உத்தரவுப்படி நான்கு வெவ்வேறு வங்கி கணக்குகளில் மொத்தம் RM114,000 பணத்தை செலுத்தியதாகத் தெரிகிறது.

பின்னர் சந்தேக நபரை தொடர்புகொள்ள முயன்றதும் முடியாத நிலையில், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420 (ஏமாற்றம்) கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here