அக்டோபர் மாதம் முதல் மோட்டார் சைக்கிளோட்டிகள் டோல் கட்டணம் செலுத்துவதா? பொய் செய்தி!

புத்ராஜெயா, 

‘ebidmotor.com’ என்ற சமூக ஊடகக் கணக்கின் உரிமையாளர் வெளியிட்ட, அக்டோபர் மாதம் முதல் மோட்டார் சைக்கிளோட்டிகள் டோல் கட்டணம் செலுத்தத் தொடங்குவார்கள் என்கிற குற்றச்சாட்டுகளை எல்.எல்.எம். முழுமையாக மறுத்தது.

இந்த தவறான செய்திகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தி, மோட்டார் சைக்கிளோட்டிகளில் தேவையற்ற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது என அந்த வாரியம் எச்சரித்தது.

மேலும், அரசாங்கம், பொதுப்பணி அமைச்சு, மலேசிய நெடுஞ்சாலை வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களின் நற்பெயருக்கு இத்தகைய அறிக்கைகள் தீங்கு விளைவிக்கும் என்றும் அது கூறியுள்ளது.

தற்போது, பிளஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் தானியங்கி எண் தகடு அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திறந்த டோல் கட்டண அமைப்பை சோதனை செய்து வருகிறது.

இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால், பிளஸ் மலேசியா பெர்ஹாட் கட்டுப்பாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளில் அத்திட்டம் கட்டமாக இத்தகைய முறையை நடைமுறைப்படுத்தும் திட்டம் உள்ளது.

இதன் மூலம் போக்குவரத்து முறையை மேம்படுத்தி பயனாளர்களுக்கு வசதியை அதிகரிக்கவும், டோல் சாவடிகளில் நெரிசலை குறைக்கவும் நோக்கம் உள்ளது.

எல்.எல்.எம். பொதுமக்களை, குறிப்பாக டோல் சாவடி பயனர்களை குழப்பக்கூடிய தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here