KLIA Aerotrain சேவை 2 வாரங்களுக்கு இடைநிறுத்தம் : இன்று முதல் இரவு நேர பராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

சிப்பாங்,

KLIA Aerotrain இன்று முதல் 2 வாரங்களுக்கு இரவு நேர பராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது, இது செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் ஒரு திட்டமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் நள்ளிரவு தொடங்கி அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்படும், இதனால் பயணிகள் பாதிப்பை குறைக்க உச்ச நேரங்களில் சேவை இடையூறாக இருக்காது என மலேசிய விமான நிலையம் தெரிவித்துள்ளது.

பராமரிப்பு காலத்தில், Aerotrain சேவைகள் தற்காலிகமாக கிடைக்காது, ஆனால் பயணிகளுக்காக பேருந்து சேவை வழங்கப்படும்.

Aerotrain சேவைகள் செயல்பட்ட முதல் நாள் முதல், இது 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியுள்ள, அதேவேளை இதுவரை 18,800 பயணங்களை நிறைவு செய்துள்ளது.

இந்த திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நீண்டகால பாதுகாப்பு மற்றும் சேவை நம்பகத்தன்மையை உறுதி செய்ய அவசியம் எனவும் மலேசிய விமான நிலையம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here