புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு: அரை மில்லியன் எரிகலன்களுக்கு சமமான எரிவாயு வெளியேற்றம்I

பெட்டாலிங் ஜெயா:

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட வெடிப்பில், வெளியான எரிவாயுவின் அளவு 14 கிலோகிராம் கொண்ட அரை மில்லியன் சமையல் எரிகலன்களை நிரப்பக்கூடிய அளவுக்கு இருந்தது என தெரியவந்துள்ளது.

மலேசிய உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் தொடர்பு தொடர்பான சிறப்பு நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை ஆவணங்களில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோலிய பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் ஹுஸ்தின் செ அமாட், தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவுகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை மேற்கோள்காட்டி, அந்தச் சம்பவத்தில் சுமார் 400 மில்லியன் கன அடி எரிவாயு வெளியானதாக தெரிவித்துள்ளார்.

“வெடிப்பில் வெளியான எரிவாயு வெறும் ஏழு நொடிகளில் தீப்பற்றிக்கொண்டது,” என அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் 1 அன்று நடந்த அந்த வெடிப்பில் 511 வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும், அந்த வெடிப்பால் ஏற்பட்ட தீ 1,000 டிகிரி செல்சியஸை தாண்டிய வெப்பநிலையுடன், 30 மீட்டர் உயரத்திற்கு மேல் பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here