பிரிக்ஸ் (Brics) அமைப்பில் மலேசியாவின் முழு உறுப்பினர் தகுதிக்கு சீனா ஆதரவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம்!

கோலாலம்பூர்:

பிரிக்ஸ் (Brics) அமைப்பில், மலேசியா, முழு உறுப்பினராகச் சேருவதற்கு, சீனா முழு ஆதரவு அளிப்பதாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான (Xi Jinping) சந்திப்பிற்குப் பிறகு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim) அறிவித்தார். இந்த ஆதரவு, உலக அரங்கில் மலேசியாவின் வளர்ந்து வரும் பங்கை பிரதிபலிக்கிறது என்றும், கடந்த ஏப்ரலில், ஷி ஜின்பிங், மலேசியாவிற்கு வருகை தந்தபோது, கையெழுத்திடப்பட்ட 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளன என்றும் அன்வார் கூறினார்.

இரு தலைவர்களும், இரு நாடுகளின் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், இந்த ஒப்பந்தங்களை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் அன்வார், ஷி ஜின்பிங்கின் நேர்மையையும் நட்பையும் பாராட்டினார். அத்துடன், சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முயற்சி (Belt and Road Initiative) மற்றும் உலகளாவிய நிர்வாக முயற்சிக்கு (Global Governance Initiative) தனது ஆதரவைத் தெரிவித்தார்.

மேலும், மின்னணுவியல், விண்வெளி, மருந்து, எண்ணெய், எரிவாயு போன்ற, அதிக மதிப்புள்ள ஏற்றுமதிகளை அதிகரிக்க, மலேசியாவின் கவனம், தொடரும் என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். குறிப்பாக கடந்த ஆண்டு, $106 பில்லியன் டாலர் வர்த்தகத்துடன், சீனா, மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகத் தொடர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here