தேனிலவு கொலை வழக்கு: புதுப்பெண் உள்பட 5 பேர் மீது 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

ஷில்லாங், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி. தொழிலதிபரான இவருக்கும் சோனம் என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 11ந்தேதி திருமணம் நடைபெற்றது.புதுமணத் தம்பதி தேனிலவுக்காக மேகாலயா சென்ற நிலையில் திடீரென மாயமானனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி புதுமண தம்பதியைத் தேடி வந்தனர்.இந்நிலையில் ஜூன் 2ந்தேதி ராஜா ரகுவன்ஷியின் உடல் அங்குள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் புதருக்குள் கண்டெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் சோனத்தை காணவில்லை என்பதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சில நாட்கள் கழித்து சோனம் போலீசில் சரணடைந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் 790 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேகாலயா போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 5 பேரில் முதல் குற்றவாளியாக சோனம், இரண்டாவது குற்றவாளியாக ராஜ் குஷ்வாஹா சேர்க்கப்பட்டுள்ளனர். 5 பேர்மீதும் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் 103 (1) பிரிவு, 238 (A) மற்றும் 61 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் கொலைக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் தடயவியல் அறிக்கை கிடைத்த பிறகு துணைக் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here