19 மாடி குடியிருப்பில் சோதனை – 125 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

கோலாலம்பூர்,

Danau Kota, Setapak பகுதியில் சட்டவிரோத குடியேறிகள் அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்ததின் பின்னர், குடிநுழைவுத் துறையினர் 19 மாடி குடியிருப்பில் நள்ளிரவில் சோதனையை நடத்தினர்.

இந்தச் சோதனையில், 81 ஆண்கள், 43 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 125 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 16 முதல் 70 வயதுக்கு இடையிலானவர்கள்; அவர்களில் 79 மியான்மார், 25 இந்தியர், 14 பாகிஸ்தானியர், 12 இந்தோனேசியர், மற்றும் 5 வங்காளதேசம் நாட்டவர்கள் ஆவர். அவர்களில் சிலருக்கு செல்லுபடியான ஆவணங்கள் இல்லாததால் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இரண்டு வார உளவுத் தகவல் சேகரிப்பு முடிவில், 380 வீடுகள் கொண்ட ஒரு பிளாக் அடையாளம் காணப்பட்டு, 64 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 400 பேர் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டனர். சோதனையில், ஒரு குடியிருப்புக்கான மாத வாடகை RM700 முதல் RM1,200 வரை, மற்றும் அறைகளுக்கான வாடகை RM200–RM400 வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது என்று கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் மொஹமது சௌபீ வான் யூசுப் தெரிவித்தார்:.

சட்டவிரோத குடியேறிகள் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களிடம் செல்லுபடியான ஆவணங்கள் உள்ளனவா என குடிநுழைவுத் துறையில் சோதனை செய்ய வேண்டும்; அதற்காக நடவடிக்கை எடுக்காவிட்டால் , 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 56(1)(d) படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சட்டவிரோத குடியேறிகள், தன்னிச்சையுடன் தங்களுடைய நாட்டிற்கு திரும்ப Migrant Repatriation Programme 2.0-இல் பங்கேற்கலாம்; இது ஏப்ரல் 30, 2026 வரை திறந்திருக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here