ஆசியக் கோப்பை போட்டியில் வென்ற இந்திய அணிக்கு கோப்பையை வழங்குவதில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி, அந்தக் கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்தின் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
ஆசியக் கோப்பை போட்டியில் வென்ற இந்திய அணிக்கு கோப்பையை வழங்குவதில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி, அந்தக் கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்தின் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. பரிசளிப்பு விழாவில், ACC தலைவரான நக்வி, வெற்றியாளரான இந்திய அணியிடம் கோப்பையை வழங்க தயாரானார். ஆனால் நக்வியின் கைகளில் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் மறுத்தனர். இதற்கிடையே, மற்ற நிர்வாகிகள் மூலம் கோப்பையை வழங்க நக்வி சம்மதிக்காமல், கோப்பையை எடுத்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து, பிசிசிஐ நிர்வாகம் ஐசிசி-யிடம் புகார் அளிக்க தயாரான நிலையில், தற்போது ஆசிய கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்திடம் நக்வி ஒப்படைத்துள்ளார். தற்போது துபாயில் உள்ள ACC மண்டல அலுவலகத்தில் இந்த கோப்பை வைக்கப்பட்டுள்ளது. விரைவில், துபாயில் இருக்கும் பிசிசிஐ நிர்வாகிகளிடம் ஆசிய கோப்பை ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








