போலி ஆவண சர்ச்சையின் மத்தியில் FAM செயலாளர் இடைநீக்கம்

ஃபிஃபாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட போலி ஆவணங்கள் தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், மலேசிய கால்பந்து சங்கத்தின் (FAM) பொதுச் செயலாளர் நூர் அஸ்மான் ரஹ்மான் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏழு பேர் குடியுரிமை பெற்ற வீரர்களின் தாத்தா பாட்டி மலேசியாவில் பிறந்ததாகக் கூறி FAM சமர்ப்பித்த ஆவணங்களுக்கு மாறாக, உலகளாவிய கால்பந்து அமைப்பின் விசாரணையில் அவர்கள் ஸ்பெயின், அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நெதர்லாந்தில் பிறந்தவர்கள் என்பதைக் குறிக்கும் அசல் பதிவுகள் இருப்பதாக ஃபிஃபாவின் ஒழுங்குமுறைக் குழு தெரிவித்துள்ளது.

தேசிய கால்பந்து அமைப்பு இதே போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்க ஒரு குழுவை அமைத்துள்ளதாக FAM துணைத் தலைவர் எஸ். சிவசுந்தரம் இன்று தெரிவித்தார். குழு தனது கடமைகளைச் செய்ய அனுமதிக்கும் வகையில், செயலாளர் நாயகம் இன்று முதல் தனது கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவார் என்று அவர் இங்குள்ள விஸ்மா FAM இல் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

விசாரணை வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். என்ன தவறு நடந்தது என்பதை குழு தீர்மானிக்கட்டும். FAM நிர்வாக ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் செயல்பாட்டில் ஏற்பட்ட “தொழில்நுட்பப் பிழையால்” இந்த சர்ச்சை ஏற்பட்டதாக நூர் அஸ்மான் முன்பு கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here