விடுமுறைக்காக குடும்பத்தாருடன் லங்காவி சென்றவர்களில் இருவர் கடலில் மூழ்கி மரணம்

அலோர் ஸ்டார்: நேற்று லங்காவி பந்தாய் செனாங்கில் நீந்தும்போது இரண்டு பேர் நீரில் மூழ்கி இறந்தனர். லங்காவி துணை காவல்துறைத் தலைவர் சம்சுல்முதீன் சுலைமான், இந்த சம்பவம் குறித்து மாலை 6.05 மணிக்கு தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

சிலாங்கூரைச் சேர்ந்த 38 மற்றும் 46 வயதுடைய பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக லங்காவிக்கு வந்ததாக அவர் கூறினார். நீரில் மூழ்கிய இருவரையும் பொதுமக்கள் கடலில் இருந்து மீட்டனர்.

அவர்கள் லங்காவியில் உள்ள சுல்தானா மலிஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here