சிறுவனுக்கு கழுத்தில் வெட்டுக் காயம் தொடர்பில் பெற்றோர் கைது

விசாரணைகளுக்கு உதவுவதற்காக, கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த ஆறு வயது சிறுவனின் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். 41 வயதுடைய தம்பதியினர் இருவரும் இன்று மாலை 4 மணியளவில் மாவட்ட காவல் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாக பத்து பஹாட் காவல் துறைத் தலைவர் ஷாருலானுார் முஷாதத் அப்துல்லா சானி தெரிவித்தார்.

குழந்தையை உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ காயப்படுத்தும் வகையில் துஷ்பிரயோகம் செய்தல், புறக்கணித்தல், கைவிடுதல் அல்லது வெளிப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ், குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)(a) இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கூடுதலாக, ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தி தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழும் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இன்று முன்னதாக, அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் நிலையான நிலையில் இருப்பதாகவும், ஆனால் மேலதிக சிகிச்சைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக ஷாருலானுார் கூறினார்.

நேற்று, பாதிக்கப்பட்டவரின் தாய் காலை 9 மணிக்கு சம்பவத்தைப் பற்றிப் புகார் அளித்ததாகவும், அதிகாலை 5.30 மணிக்கு எழுந்தபோது தனது மகன் காயமடைந்திருப்பதைக் கண்டதாகவும் ஷாருலானுவார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here