மைத்துனர் கத்தியால குத்தியதால் விவசாயி மரணம்

ஜெர்லூன்:  கம்போங் பிடா 3 இல் நேற்று இரவு 45 வயது விவசாயி ஒருவர் தனது மைத்துனரால் கத்தியால் குத்தப்பட்டதால் உயிரிழந்ததாக  நம்பப்படுகிறது. குபாங் பாசு மாவட்ட காவல்துறைத் தலைவர் ரட்ஸி அப்துல் ரஹீம் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து இரவு 7.05 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

சந்தேக நபர் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார், மேலும் 30 செ.மீ. நீளமுள்ள ஒரு கத்தியும் கைப்பற்றப்பட்டது. அருகிலுள்ள ஒரு படி வயலில் ஒரு உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஆயுதத்தை வைத்திருந்த சந்தேக நபர், காவல்துறையினரைத் தாக்க முயன்றார்,. ஆனால் 15 நிமிடங்கள் அவரிடம் பேசிய பின்னர் பின்னர் சரணடைந்தார் என்று அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறினார்.

பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது சந்தேக நபருக்கோ எந்த முன் குற்றப் பதிவும் இல்லை என்றும், சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் ரட்ஸி கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அலோர் செத்தாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் ரட்ஸி பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here