மலேசியரான சாமிநாதன் நவ.,27 அன்று சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுவார்

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு மலேசியரான சாமிநாதன் செல்வராஜு நவம்பர் 27 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார் என்று சிங்கப்பூர் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அண்மைய மாதங்களில் இரண்டு மலேசியர்களான தட்சிணாமூர்த்தி, பன்னீர் செல்வம் ஆகியோர் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டனர்.

மலேசியாகினி பார்வையிட்ட சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் கடிதத்தின்படி, மூத்த உதவி இயக்குநர் (சிறை நிர்வாகம்) லிம் லே கிம், நவம்பர் 26 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சாமிநாதனின் குடும்பத்தினர் நீட்டிக்கப்பட்ட வருகைகளை மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதிப்பதாகத் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி, தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு, சிங்கப்பூத் போதைப்பொருள் துஷ்பிரயோகச் சட்டத்தின் (MDA) ஒரு விதிக்கு எதிரான அரசியலமைப்பு என்ற வாதத்தை நிராகரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here