வெள்ள நிலைமை மோசமடைந்ததால் 18,470 பேர் தற்காலிக முகாமில் தஞ்சம்

மேற்கு மலேசியாவில் இரவு முழுவதும் வெள்ள நிலைமை மோசமடைந்ததால் 18,470 பேர் தற்காலிக முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். கிளந்தான் மாநிலம் கோத்தா பாரு, தும்பாட், பச்சோக், பாசீர் புத்தே ஆகிய இடங்களில் உள்ள 40 நிவாரண மையங்களில் 9,962 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலாங்கூரிலும் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு 2,696 பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

சமூக நலத்துறையின் இன்ஃபோபென்கானா போர்ட்டலின்படி, கோல சிலாங்கூர், கிள்ளான், ஷா ஆலம், உலு லங்காட், சபாக் பெர்னாம் ஆகிய இடங்களில் உள்ள 19 வெளியேற்ற மையங்களில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். பேராக்கில் 2,617 பேர், கெடாவில் 1,651 பேர், பெர்லிஸில் 1,091 பேர், பினாங்கில் 337 பேர், தெரெங்கானுவில் 92 பேர் மற்றும் பகாங்கில் 22 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பிரிக்ஃபீல்ட்ஸில், நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இரண்டு பேர் ஒரு தற்காலிக  தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here