கோலாலம்பூர்: பத்திரிகையாளர் ஹரேஷ் தியோல் மீதான தாக்குதல் வழக்கில் சந்தேக நபர் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கருப்பு டி-சர்ட் மற்றும் கருப்பு ஷார்ட்ஸ் அணிந்த 37 வயதான அந்த நபர், குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் காலை 10.06 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்தார்.
சந்தேக நபர் மீது இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) காலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









