தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை சிலாங்கூர் நிர்வாகத்தை தொடர்ந்து வழிநடத்த விருப்பம் -மந்திரி பெசார்

ஷா ஆலம், டிசம்பர் 11 —

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி, மடானி அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை சிலாங்கூர் நிர்வாகத்தை தொடர்ந்து வழிநடத்த விரும்புவதாக அமிருதீன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மந்திரி புசார் பதவியில் மீதமுள்ள காலம், சிலாங்கூருக்காக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களை முடிக்க உதவும் என்று அவர் கூறினார்.

“இரண்டு ஆண்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், பொதுவாக நாம் அறிமுகப்படுத்தவும் முழுமையாக செயல்படுத்தவும் பல புதிய விஷயங்கள் இருக்காது,” என்று நேற்று இங்குள்ள சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தின் நுழைவாயிலில் நடந்த சிலாங்கூர் மசூதி மற்றும் சுராவ் நிதி பங்களிப்பு ஒப்படைப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here