வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் மியான்மரில் இருந்து நாடு திரும்பினர்

மியான்மரின் மியாவாடியில் வேலை மோசடிகளில் பாதிக்கப்பட்ட இருபது மலேசியர்கள், மலேசியா, தாய்லாந்து – மியான்மர் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். டிசம்பர் 10 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு கெடாவில் உள்ள புக்கிட் காயு ஹித்தாம் சுங்கம், தனிமைப்படுத்தல், பாதுகாப்பு வளாகத்திற்கு இந்தக் குழு வந்ததாகவும், மேலும் நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாங்காக்கில் உள்ள மலேசிய தூதரக அதிகாரிகள் இரண்டாவது தாய்லாந்து-மியான்மர் நட்புப் பாலம் வழியாக மியாவாடிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தி மலேசியாவிற்கு அனுப்பி வைத்தனர் என்று விஸ்மா புத்ரா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் வேலை மோசடி கும்பல்களில் சிக்கியுள்ள மலேசியர்களை நாடு திரும்புவதற்கு வசதியாக அமைச்சகம் மேற்கொண்ட முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த நாடு திரும்பும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 20 மலேசியர்களை நாடு திரும்ப அனுப்புவதை எளிதாக்குவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் ஒத்துழைத்ததற்காக தாய்லாந்து அரசாங்கத்திற்கும் மியான்மரில் உள்ள அதிகாரிகளுக்கும் வெளியுறவு அமைச்சகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here