இவ்வாண்டு குடிநுழைவுத்துறையால் 90,000 க்கும் மேற்பட்டோர் கைது

கோலாலம்பூர்:

மலேசிய குடிநுழைவுத்துறை இவ்வாண்டு முழுவதும் சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிய நாடு தழுவிய அளவில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையில் சுமார் 90,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

சமீபத்தில் டிசம்பர் மாதத்தில் ஜோகூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 356 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் பெரும்பான்மையானோர் (299 பேர்) மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் கோலாலம்பூரின் முக்கிய இடங்களான ஜாலான் லோக் யூ, புக்கிட் பிந்தாங் மற்றும் ஜாலான் அலோர் போன்ற பகுதிகளில் உள்ள பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு குறிப்பிட்ட சோதனையில் மட்டும் 164 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோதனையில் சிக்கியவர்களில் 5,000-க்கும் மேற்பட்டோர் ஐ.நா. அகதிகள் தூதரகத்தின் (UNHCR) அடையாள அட்டையை வைத்திருந்தனர். இது தொடர்பாக, அகதிகள் என்ற போர்வையில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here