மாமன்னரை சந்தித்து பேசிய பிரதமர் அன்வார்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார். இந்த அமர்வின் போது, ​​மத்திய அரசின் நிர்வாகம் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் மாட்சிமை தங்கியிடம் எடுத்துரைக்கப்பட்டன, மேலும் தேசிய நலன் சார்ந்த தற்போதைய பிரச்சினைகள் குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டன.

மாட்சிமை தங்கியவரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் உள்ள ஒரு பதிவின்படி, மாட்சிமை தங்கியவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு  இஸ்தானா புக்கிட் துங்குவில் நடந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here