கோயில் மர உத்திரம் தலையில் மோதியதால் உயிரிழந்த சிறுமி: கோல லங்காட்டில் சம்பவம்

ஷா ஆலம்: கோல லங்காட் அருகே உள்ள தஞ்சோங் செபாட்டில் உள்ள ஒரு கோயிலில், நேற்று மர உத்திரம் மோதி நசுங்கியதில் 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமது அக்மல் ரிசல் ராட்ஸி, இரவு சுமார் 8.34 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தமக்கு அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனது குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தில் எந்தக் குற்றச் செயலும் இல்லை என்று காவல்துறை கண்டறிந்ததுடன், இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here