கோலாலம்பூர் | ஏப்ரல் 10, 2026
பிரபல மலேசிய நடிகை நோரிஷ் கர்மான் (51), கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான இரத்த சோகை மற்றும் இரும்புச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் முடங்கியுள்ளார்.
வருக்குத் தொடர்ந்து இரத்த தானம் மற்றும் இரும்புச் சத்து ஊசிகள் ஏற்றப்பட வேண்டியுள்ளதாக அவரது மகள் நடிகை மாண்டா ஹாஷ் தெரிவித்துள்ளார்.
திகரித்து வரும் மருத்துவச் செலவுகளால் அவரது குடும்பத்தினர் கடும் நிதி நெருக்கடியில் உள்ளனர். இதற்காகப் பழைய ஆடைகளை விற்பனை செய்தும், சமூக வலைதளங்கள் வாயிலாக நிதி திரட்டியும் வருகின்றனர்.
‘சாயாங் சல்மா’ மற்றும் ‘ராஜா மெலேவார்’ போன்ற திரைப்படங்களின் மூலம் நோரிஷ் கர்மான் மலேசியத் திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.





















