மங்காத்தா படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்

கொரோனா ஊரடங்கில் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன் இயக்குனர் வெங்கட் பிரபு நேரலையில் கலந்துரையாடினார். அப்போது விஜய் பற்றி வெங்கட் பிரபு கூறியபோது ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். ‘மங்காத்தா’ படம் முடிந்தவுடன், வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு மங்காத்தா படம் அவ்வளவு பிடித்திருந்தது.

அப்போது நிறைய பேசினோம். கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொன்னார். சீக்கிரமே அவரை கவரும் வகையில் ஒரு நல்ல கதையுடன் போய் சந்திக்க காத்திருக்கிறேன். அவரோடு விரைவில் வித்தியாசமான ஒரு படம் பண்ணனும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here