எரிபொருள் விலை உயர்வு: அலுவலகத்திற்கு வரத் தேவையில்லை; 33 சேவைகளை ஆன்லைனில் பெறலாம் – JPJ அறிவிப்பு!

கோலாலம்பூர், ஏப்ரல் 12:

தற்போதைய எரிபொருள் விலை உயர்வு மற்றும் உலகளாவிய சந்தை நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் நேரில் அலுவலகத்திற்கு வருவதைத் தவிர்த்து, ஜே.பி.ஜே-வின் (Road Transport Department – JPJ) டிஜிட்டல் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் உலக சந்தையில் எரிபொருள் விநியோகம் மற்றும் விலை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் நேரடித் தாக்கமாகப் பொதுமக்கள் எரிபொருள் செலவைச் சேமிக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும், அலுவலகங்களில் ஏற்படும் கூட்டத்தைத் தவிர்க்கவும் டிஜிட்டல் தளங்களை நோக்கி மாறுவது அவசியம் என ஜே.பி.ஜே பொது இயக்குனர் டத்தோ ஏடி ஃபாட்லி ராம்லி (Datuk Aedy Fadly Ramli) தெரிவித்துள்ளார்.

இணையதளம் (Official Portal): ஜே.பி.ஜே-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மொத்தம் 33 வகையான போக்குவரத்து தொடர்பான சேவைகளைச் செய்துகொள்ளலாம்.

MyJPJ செயலி (App): MyJPJ செயலி மூலம் 16 வகையான சேவைகளை உங்கள் கைப்பேசியிலேயே எந்நேரமும் அணுகலாம்.

“நேரில் வர வேண்டிய அவசியம் இல்லாத அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் பொதுமக்கள் இந்தத் டிஜிட்டல் தளங்களையே பயன்படுத்த வேண்டும். இது அரசாங்கத்தின் ஆற்றல் சேமிப்பு திட்டத்திற்கு வலு சேர்ப்பதோடு, பொதுச் சேவைகளை இன்னும் வேகமாகவும், எளிமையாகவும் மாற்றும்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜே.பி.ஜே தனது சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அலுவலகங்களுக்கு நேரில் சென்று நேரத்தை வீணடிப்பதையும், எரிபொருள் செலவை அதிகரிப்பதையும் தவிர்த்து, ‘உங்கள் விரல் நுனியில் சேவை’ (Services at your fingertips) என்ற இந்த டிஜிட்டல் வசதியைப் பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here