மரத்தின் மீது கார் மோதி பெண் பலி!

சிபு, ஏப்ரல் 12:

சரவாக் மாநிலம், சிபுவில் உள்ள ஜாலான் லானாங் (Jalan Lanang) பகுதியில், நேற்று நள்ளிரவு கார் மரம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 46 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12:45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. லானாங் 61-க்கு அருகிலுள்ள பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த மொஹாயா குட்டிங் (Mohaya Kuting) என்பவரைத் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

மீட்கப்பட்ட பிறகு, அங்கு விரைந்திருந்த மருத்துவப் பணியாளர்கள் நடத்திய சோதனையில், மொஹாயா குட்டிங் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

உயிரிழந்தவரின் உடல், மேலதிக நடவடிக்கை மற்றும் விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலைகளில் கவனமுடன் வாகனங்களைச் செலுத்துமாறு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here