ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் தணிந்தபாடில்லை. தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், இன்று பாகிஸ்தானில் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா குழு புறப்படும் என்று டிரம்ப் நேற்றே கூறியிருந்தார். எனினும், ஈரான் பங்கேற்குமா என்பது உறுதியாகவில்லை. ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது.
இந்த நிலையில், ஈரானிய கப்பலை சிறைபிடித்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி செல்ல முயன்ற ஈரானிய சரக்கு கப்பலை சிறைபிடித்து உள்ளோம் என்றுகூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டதாவது:









