இஸ்லாமாபாத், அரபிக்கடலில் பயணம் செய்துகொண்டிருந்த எம்.வி. கவுதம் என்ற இந்தியக் கப்பல், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்து நின்றது. அப்போது இந்திய அதிகாரிகள் உதவிக்கு அழைத்ததன் பேரில், விரைந்து சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் அந்த கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு தேவையான உணவு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கினர்.









