மே மாத நடுப்பகுதியில் எண்ணெய் விநியோகத் திட்டங்களை அன்வார் அறிவிப்பார்; அமைச்சர்

எண்ணெய் விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான திட்டங்கள் மே மாத நடுப்பகுதியில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா நசீர் தெரிவித்தார்.

ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தேவையான உள்நாட்டு எண்ணெய் விநியோகம் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். தற்போதைய விநியோகம் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்று அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது.

பெட்ரோனாஸ் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான இறுதிக் கட்டத்தில் உள்ளது என்று அக்மல் கூறினார். பல புதிய ஆதாரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக பிரதமர் முன்னதாகக் கூறியிருந்தார். நாட்டின் எண்ணெய் விநியோகம் தொடர்பான அடுத்தகட்ட அட்டவணையை அவர் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இன்று இங்கு மலாயா பல்கலைக்கழகத்தின் பொருளாதார உச்சிமாநாட்டையொட்டி நடைபெற்ற எரிசக்தி கருத்தரங்கில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செயல்பாட்டு மட்டத்தில் போதுமான கையிருப்பு உள்ளது என்று அக்மல் கூறினார். எரிசக்தி விநியோகத்தின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அணுகுமுறையாக பிராந்திய ஒத்துழைப்பையும் அரசாங்கம் கருத்தில் கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here