மின்சிகரெட் வடிவில் பரவும் ஆபத்து: செயற்கை போதைப்பொருள்களை வேரறுக்க AADK-இன் புதிய வியூகம்!

கோலாலம்பூர்:

லேசியாவில் ஃபெண்டானில் (Fentanyl) உள்ளிட்ட புதிய தலைமுறை செயற்கை போதைப்பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கும் நோக்கில், அடுத்த ஜூன் மாதம் முதல் அதிநவீன சிறப்புச் சோதனைக் கருவிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிறுவனம் (AADK) அறிவித்துள்ளது.

சிப்பாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய AADK தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ, “ஃபெண்டானில், சிந்தெடிக் கன்னாபினாய்ட் (Synthetic Cannabinoid), கோகைன் மற்றும் ‘மேஜிக் மஷ்ரூம்’ (Magic Mushroom) எனப்படும் போதைக்காளான்கள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்டறியும் இக்கருவிகள், ஏற்கனவே நாடு முழுவதுமுள்ள AADK அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிட்டன” என்று குறிப்பிட்டார்.

AADK KORBAN

பாரம்பரிய போதைப்பொருள்களைத் தாண்டி, தற்போது மின்சிகரெட் (Vape) திரவ வடிவில் இத்தகைய ஆபத்தான செயற்கை போதைப்பொருள்கள் பரவி வருவது மிகுந்த கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, இக்கருவியின் மூலம் நாடு தழுவிய அளவில் தரவுகள் (Data) சேகரிக்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், இதன் மூலம் எழும் புதிய சவால்களை எதிர்கொண்டு, போதைப்பொருள் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப் புனர்வாழ்வு மையங்கள் முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும் டத்தோ ருஸ்லின் ஜூசோ உறுதிபடத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here