பாட்டியை சுத்தியலால் தாக்கிய மனநலப் பாதிக்கப்பட்ட நபர்

டுங்குன்: மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், கம்போங் கோலா அபாங்கில் தனது 79 வயது பாட்டியை சுத்தியலால் தாக்கியுள்ளார். டுங்குன் காவல் துறை கண்காணிப்பாளர் நிக் அப் ஹலிம் நிக் மாட் கூறுகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 19) அன்று, தன்னுடன் வசிக்கும் 25 வயது பேரனை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்க  முயன்றபோது, ​​அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது என்றார்.

சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரைத் தள்ளிவிட்டு, பின்னர் சுத்தியலால் தாக்கியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது என்று அவர் சனிக்கிழமை (ஜூன் 20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக டுங்குன் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார், தற்போது அவரது நிலை சீராக உள்ளது.  மனநல நோயாளியான சந்தேக நபரை காவல்துறை கைது செய்துள்ளதுடன், பயன்படுத்தப்பட்ட சுத்தியலையும் பறிமுதல் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here