சென்சார் போர்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் – ராம் கோபால் வர்மா

மும்பை, இந்திய சினிமாவில் முன்னணி டைரக்டர்களில் ராம் கோபால் வர்மா முக்கியமானவர். இவரது திரைப்படங்கள் பல தரப்பிலும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனிடையே, இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் சென்சார் போர்டை ராம் கோபால் வர்மா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

சென்சார் போர்டு ஒழிப்பு

இந்நிலையில், இந்தியாவில் சென்சார் போர்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூகவலைதள பதிவில்,

சென்சார் போர்ட்டு ஒழிக்கப்பட வேண்டும். இன்றைய டிஜிட்டல் உலகில் சென்சார் போர்ட்டு காலாவதியானது, தேவையற்றது.

ஸ்மார்ட் போன்கள், உலகளாவிய ஸ்ட்ரீமிங், எல்லையற்ற தகவல்கள் கிடைக்கும் இந்த காலத்தில் ஒரு டைரக்டரின் உண்மை பார்வையில் இருந்து பெரியவர்களை அரசு நியமிக்கும் குழு பாதுகாக்க முடியும் என நினைப்பது காலத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, முட்டாள்தனமானதும்

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here