மலேசியாவில் புகைமூட்டம் தீவிரம்: 21 பகுதிகளில் காற்றுத் தரம் ‘ஆரோக்கியமற்ற’ நிலைக்கு வீழ்ச்சி!

கோலாலம்பூர்:

லேசியாவில் எல்லை தாண்டிய புகைமூட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் 21 பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு (API) ‘ஆரோக்கியமற்ற’ நிலையைப் பதிவு செய்துள்ளதாக வளிமண்டலக் காற்று மேலாண்மை அமைப்பு (APIMS) இன்று மாலை 7 மணி நிலவரப்படி தெரிவித்துள்ளது.

சரவாக் மாநிலத்தில் 7 பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டின் மிக மோசமான நிலையாகச் செரியானில் (Serian) 190 புள்ளிகள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து கூச்சிங் (181), சமரஹான் (172), ஸ்ரீ அமான் (155), மூக்கா (151), பின்டுலு (136) மற்றும் மிரி (110) ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் ஜோஹான் செத்தியா (164), ஷா ஆலாம் (151) மற்றும் கோலா சிலாங்கூர் (117) ஆகிய இடங்களும் கெடாவில் சுங்கை பட்டாணி (154) மற்றும் அலோர் ஸ்டார் (130) ஆகிய இடங்களும் பேராக்கின் ஸ்ரீ மஞ்சோங் (152), தஞ்சோங் மாலிம் (145) மற்றும் தாசிக் ஈப்போ (119) ஆகிய இடங்களும் கோலாலம்பூர் & புத்ராஜாயா: செராஸ் (132) மற்றும் புத்ராஜாயா (130) ஆகிய இடங்களும் ஜோகூரின் கோத்தா திங்கி (130) மற்றும் சிகாமாட் (102) ஆகிய இடங்களும் மலாக்காவின் புக்கிட் ரம்பாய் (118) மற்றும் பினாங்கின் மிண்டென் (103) காற்றின் தரத்தில் ஆரோக்கியமற்ற நிலையை பதிவு செய்துள்ளன.

அதேநேரம் நாட்டிலுள்ள 47 பகுதிகள் மிதமான காற்றுத் தரத்தைப் பதிவு செய்துள்ளன. அதில் செபராங் பிறை, பத்து மூடா, கிள்ளான், நிலாய் மற்றும் சிரம்பான் ஆகிய பகுதிகள் எல்லைக் கோடான 99 புள்ளிகளில் உள்ளன. அதேவேளையில், நாட்டில் எந்தவொரு பகுதியிலும் ‘நல்ல’ காற்றுத் தரம் பதிவாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here