கார் சரிவில் தவறி விழுந்ததில் இந்தோனேசிய நபர் ஒருவர் உயிரிழந்தார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறுகையில், ஷா ஆலமில் உள்ள SJKT புக்கிட் தாரா அருகே கார் சரிவில் இருந்து விழுந்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இறந்தவர் ஓட்டிச் சென்ற காரில் மேலும் மூன்று பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் செல்வதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் காரில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டதாக அவர் கூறினார்.









