கெய்ரோ:
ஊழலில் ஈடுபடும் எவரையும் தாம் பாதுகாக்க மாட்டோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது நிலைப்பாட்டை இன்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.
திட்ட அனுமதிகளை பெறுவதற்காக பணம் கேட்டதாகக் கூறப்படும் எட்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் உட்பட அனைத்து ஊழல் வழக்குகள் குறித்தும் விசாரணை நடத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விட்டுவிடுவதாக அவர் கூறினார்.
“பிரதமர் பதவியைப் பயன்படுத்தி யாருக்கும் (ஊழலில் ஈடுபட்ட) பாதுகாப்பு அளிக்க மாட்டேன்” என்று அவர் சொன்னார்.









