கோத்த கினபாலு: உடல் பேறு குறைந்த பெண்ணை (வாய் பேச முடியாத) பாலியல் பலாத்காரம் செய்ததாக 56 வயதுடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சபாவின் தென்மேற்கு பியூஃபோர்ட் மாவட்டத்தில் உள்ள கம்போங் பாண்டிங் மெராபாவில் நேற்று 24 வயது பாதிக்கப்பட்டவரின் தாயார் அளித்த புகாரினை தொடர்ந்து சந்தேக நபரை கைது செய்தனர்.
பேச முடியாமல் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண் தன் தாயுடன் தனக்கு நடந்த கொடூரத்தை கூற முடிந்தது. பியூஃபோர்ட் காவல்துறைத் தலைவர் யூசோஃப் ஜாக்கி மாட் யாகோப், தான் ஐந்து முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதாகவும், சமீபத்தியது மே 17 அன்று நடந்ததாகவும் கூறினார்.
சந்தேக நபர் யாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று அந்தப் பெண்ணை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, சந்தேக நபர் இதற்கு முன்னர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
மருத்துவ பரிசோதனைக்காக அந்தப் பெண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யூசோஃப் தெரிவித்தார்.











