மாலைகளில் மிகச்சிறந்த மாலை என்று குறிப்பிடுவது ஏலக்காய் மாலை. ஆம் ஏலக்காய் மாலை பெருமாளுக்கு உகந்தது. ஏலக்காய் மிக உன்னதமான ஒரு மருந்தாக நம் சித்த மருத்துவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இன்று பெருமாள் கோயில் கொடுக்கக்கூடிய தீர்த்தங்களில் ஏலக்காய் முக்கியமானவை. சக்கரைப் பொங்கலுக்கு ஏலக்காய்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோன்று மாலைகளிலும் ஏலக்காய் மாலை உன்னதமானது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை பெருமாளுக்கு ஏலக்காய் மாலை சாற்றுவது உன்னதமான பலன்களைத் தரும். பதவி, புகழ் அந்தஸ்து பெறுவார்கள்.