ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் தலீபான் தலைவர்கள் 2 பேர் பலி

 

ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன. ராணுவ வீரர்களும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

காபூல்

பாக்டியா மாகாணத்தில் உள்ள சுர்மாத் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் உள்பட பல பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவவீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவவீரர்கள் அங்கு விரைந்து சென்று, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களுடன் இருந்த 11 பயங்கரவாதிகளும் பலியாகினர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை ராணுவவீரர்கள் கைப்பற்றினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here