மம்மூட்டிக்கு விருது தராதது ஏன்? ரசிகர்கள் விளாசல்

சமீபத்தில் 2018ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதில் தென்னிந்திய படங்கள் குறிப்பாக தமிழ் படம் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. பரியேறும் பெருமாள், பேரன்பு படங்கள் பெரிய அளவில் விமர்சகர்களிடம் வரவேற்பும், பாராட்டும் பெற்றது. அப்படங்களுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றதை அளித்தது.

குறிப்பாக மம்மூட்டி நடித்த பேரன்பு படத்திற்காக மம்மூட்டிக்கு சிறந்த நடிகர் விருது தராததற்கு அவரது ரசிகர்கள் தேசிய விருது தேர்வு குழு தலைவரை திட்டி தீர்த்திருக்கின்றனர்.

அத்துடன் அவரது குடும்பத்தினரையும் கெட்டவார்த்தைகளால் வசைபாடி உள்ளனர். மம்மூட்டி ரசிகர்களின் இந்த போக்கு விருது குழுவை எரிச்சலை அடையச் செய்துள்ளது. இதுபற்றி விருது குழு தலைவர் தரப்பில் கூறும்போது,’பேரன்பு படம் விருது போட்டிக்கு வரவே இல்லை.

அது பிராந்திய அளவிலான தேர்வு பிரிவி லேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது விருது தேர்வுக்கு எப்படி பரிசீலனை செய்வது. இதை புரிந்துகொள்ளாமல் மம்மூட்டி ரசிகர்கள் மரியாதை குறைவாக நடந்திருக்கிறார்கள். இதற்காக தனது ரசிகர்கள் சார்பில் மம்மூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ரசிகர்களின் செயலுக்காக விருது குழுவினரிடம் மன்னிப்பு தெரிவித்திருக்கிறார் மம்மூட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here