பட்டாயா
48 வயது ஆடவர் ஒருவர் டுரியான் பழத்தை சாப்பிட்டு விட்டு மது அருந்தியதால் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் பட்டாயா தாய்லாந்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின் போது அந்த ஆடவர் வேலை முடிந்து அவரின் நண்பருடன் டுரியான் சாப்பிட்டு கொண்டிருந்தார். அவ்வேளை பலமுறை அவரது நண்பர்கள் டுரியானையும் மதுவையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தியும் அவர் அச்செயலை புரிந்ததாக நம்பப்படுகிறது.