லண்டன் –
இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ணப் போட்டியில் மென்ஙெ்ஸ்டர் யுனைடெட் நேற்று நடந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல்கணக்கில் பெர்ன்லியை அதன் அரங்கில் வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
சொந்த அரங்கில் பெர்ன்லி விளையாடினாலும் 44ஆவது நிமிடத்தில் மென்செஸ்டரின் முதல் கோலை அந்தோணியோ மார்ஷெல் போட்டார். பின்னர் 95ஆவது நிமிடத்தில் 2ஆவது கோலை ராஷ்போர்ட் அடித்தார்.
இந்த வெற்றியால் மென்செஸ்டர் யுனைடெட் 31 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தை நோக்கி முன்னேறியுள்ளது. இனி வரும் ஆட்டங்களில் இதே வெற்றி தொடருமானால் 2 முதல் 4 இடங்களை நோக்கி மென்செஸ்டர் முன்னேறலாம். பின்னர் நடந்த ஆட்டத்தில் நோர்விச் கிளப்பை எதிர்த்து விளையாடிய டோட்டன் ஹாம் 2-2 என்ற கோல்கணக்கில் நோர்விச்சிடம் டிரா கண்டது.
18ஆவது நிமிடத்தில் நோர்விச்சின் கோலை வோரினிக் அடித்தார். பதிலுக்கு 55ஆவது நிமிடத்தில் டோட்டன்ஹாமின் கோலை எரிக்சன் போட்டார். 61ஆவது நிமிடத்தில் டோட்டன்ஹாம் வீரர் அவ்ரியல் சொந்த கோலை அடித்தார். இதனால் நோர்விச் 2-1 என்ற கோல்கணக்கில் முன்னணி வகித்தது.
கடுமையான போராட்டங்களுக்கு இடையில் 83ஆவது நிமிடத்தில் பெனால்டி வழி டோட்டன்ஹாமின் 2ஆவது கோலை ஹேரி கோன் அடித்து சமப்படுத்தினார். டோட்டன் ஹாம் 30 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.
இதனிடையே, சொந்த அரங்கிலேயே வெஸ்ட் ஹெமர் 1-2 என்ற கோல்கணக்கில் லெய்செஸ்டரிடம் வீழ்ந்தது. 19 புள்ளிகளுடன் 17ஆவது இடத்தில் வெஸ்ட் ஹெமர் பின் தள்ளப்பட்டதால் அதன் நிர்வாகி பெலிகிர்னி நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.