சென்னை, மார்ச் 16-
இந்தியாவில் இதுவரை 107 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முதல் உயிரிழப்பும், அதனை தொடர்ந்து டெல்லியிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பொது இடங்களில் மக்கள் கூட திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை.
கேரளா வந்த விமானத்தில் பயணித்த தமிழர்களின் தகவல்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.